வேளச்சேரி: தரமணி சி.பி.டி வளாகத்தில், டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் உள்ளது. இங்குள்ள விடுதியில் நேற்று மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டனர். இதில், 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, விடுதி மாணவிகள் 60 பேர், சுகாதாரமான உணவு, அடிப்படை வசதி கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செண்பகவல்லி உறுதி அளித்தார். இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்….
மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
previous post