Wednesday, May 15, 2024
Home » மணிப்பூரில் இறந்த சிஆர்பிஎப் எஸ்ஐ உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

மணிப்பூரில் இறந்த சிஆர்பிஎப் எஸ்ஐ உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

by Ranjith

பெரியகுளம், ஜன. 29: பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் சேர்ந்த நாகராஜன்(57). இவர் மனைவி ராமலட்சுமி. இவருக்கு திவாகர், ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர் மணிப்பூர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் எஸ்ஐயாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 26ம் தேதி பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவரின் உடல் மத்திய பாதுகாப்பு படையினரால் நேற்று காலை விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினரின் வாகனத்தில் இறந்த நாகராஜன் சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் உறவினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் மத்திய பாதுகாப்பு படையினர் மலர் வளையம் வைத்து மரியாதை மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக ஜெயமங்கலம் மையான திடலுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் மயான திடலில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

5 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi