சென்னை: புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிக்கை: தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களின் வழியாக பாயும் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் வகையில் ரூ.86 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள விரிவான செயல் திட்ட அறிக்கையை, மேற்கண்ட 3 மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது. தமிழகத்தின் குடிநீர் தேவை அறவே தீரும். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். இந்தியாவில் வாழும் அனைத்து மாநில மக்களையும் அரவணைத்து, அவர்களின் குறைகளை கண்டறிந்து, தீர்வுகாணும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்….