சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 32,36,622 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எல்லாம் வீடு தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்….