Friday, May 10, 2024
Home » மகாராஷ்டிராவில் விநோதம் ஒரே நபரை மணந்த இரட்டை சகோதரிகள்: மணமகன் மீது போலீஸ் வழக்கு

மகாராஷ்டிராவில் விநோதம் ஒரே நபரை மணந்த இரட்டை சகோதரிகள்: மணமகன் மீது போலீஸ் வழக்கு

by kannappan

சோலாப்பூர்: மகாராஷ்டிராவில் மணமேடையில் ஒரே நபரை இரட்டையர்களான சகோதரிகள் மணந்து கொண்ட விநோத சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இரட்டையர்களான 36 வயதாகும் சகோதரிகள் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும, சோலாப்பூர் மாவட்டம் மல்ஷிராஸ் தாலுகாவைச் சேர்ந்த அதுல் என்ற வாலிபருக்கும் திருமணம் நடத்த கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே மேடையில் இரு சகோதரிகளும் ஒரே நபரை திருமணம் செய்து கொள்ள இரு வீட்டாரும் சம்மதித்தனர். அதன்பேரில் திருமணம் தடபுடலாக நடந்தது. மணமேடையில் இரு சகோதரிகளும் ஒரே மாலையை மணமகனுக்கு அணிவித்தனர். அவர்களது திருமண புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் அக்லுஜ் காவல் நிலைய போலீசார் மணமகன் மீது இபிகோ 494ன் கீழ் (கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போதே 2வது திருமணம் செய்து கொள்தல்) வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தந்தை சமீபத்தில் இறந்த நிலையில் தங்களின் தாயை மிகவும் அன்போடு அதுல் கவனித்துக் கொண்டதால், அவரையே இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக இரட்டை சகோதரிகள் கூறி உள்ளனர்….

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi