ஜெயங்கொண்டம், டிச.21: ஜெயங்கொண்டம் அருகே போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அக்குபஞ்சர் வைத்தியம் பார்ப்பதற்கு படித்து ஆங்கில மருத்துவம் கொடுத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே குளத்தூர் கைகாட்டியில் சித்த மருந்துகடை நடத்துவதாக கூறி ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் உரிய மருத்துவம் பயிலாமல் ஊசி போட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் இவர் மீது உளுந்தூர்பேட்டை, மீன்சுருட்டி காவல் நிலையங்களில் இதேபோல போலி மருந்துவம் பார்த்த வழக்குகள் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
போலி மருத்துவர் கைது
previous post