சென்னை: கேளம்பாக்கம் படூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மதுமதி. இவருக்கு சித்தாலப்பாக்கம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2,600 சதுரடி நிலம் உள்ளது. இந்த இடத்தை அவர் கடந்த 1983ம் ஆண்டு பத்மாவதம்மா என்பவரிடம் வாங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு போலியான பத்திரம் தயார் செய்து ஆள்மாறாட்டம் மூலம் குரோம்பேட்டை பாரதிபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு ஒரு பொது அதிகாரம் கொடுத்தது போல், அண்ணாநகர் பார்க் ரோடு பகுதியை சேர்ந்த அப்துல்காதர் ஆகியோர் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2016ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்து நிலத்தை அபகரித்துள்ளனர். மேலும், அப்துல்காதர் நிலத்திற்கான ஆவணங்களை தனியார் மற்றும் பொதுவுடைமை வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று லாபம் அடைந்ததும் விசாரணையில் தெரியந்தது. அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சசிகுமார் மற்றும் அப்துல்காதர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நிலதையும் மீட்டனர்….
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது
previous post