போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் போரில் பலியாகி உள்ளனர். 1,684 பொதுமக்களும், 116 குழந்தைகளும் காயமடைந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா உதவி: இந்தியாவில் உள்ள உக்ரைனுக்கான தூதர் கேட்டுக் கொண்டதன்பேரில், அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள இந்திய அரசு முன்வந்துள்ளது. இதற்காக உக்ரைனுக்கு மருந்து, உணவு, உடைகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.பெலாரஸ் படைகள் விரைவில் தாக்கும்?: ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போர் தொடுக்க பெலாரசும் தயாராகி வருகிறது. விரைவில் மேலிடத்தில் உத்தரவு கிடைத்து, பெலாரஸ் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து போரிடுவார்கள் என்று மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இதற்கேற்றார் போல் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் பெலாரஸ் ராணுவத்தின் ஏராளமான பீரங்கிகள் அணிவகுத்து தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள வீடியோக்கள் நேற்று வெளியாகின. ரூபிள் மதிப்பு அதிரடி சரிவு: உக்ரைன் மீதான போரை தொடர்ந்து, ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடை விதித்து, வங்கிகளை முடுக்கி உள்ளது. ஸ்விப்ட் பணபரித்தவனை முறையிலும் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. இதனால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு எதிராக ரஷ்ய நாயணத்தின் (ரூபிள்) மதிப்பு 26% அதிரடியாக சரிந்து உள்ளது. ஒரு டாலர் 84 சரிந்து 105.27 ஆக உள்ளது. ரூபிள் மதிப்பு அதிரடி சரிவை சரி கட்டவும், பொருளாதார சூழ்நிலையை சமாளிக்கவும் வட்டி விகிதத்தை 9.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீமாக உயர்த்தி ரஷ்ய மத்திய வங்கி அறிவித்து உள்ளது. அகதிகளை வரவேற்கும் நாடுகள்:உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை அமெரிக்கா, பிரிட்டன், போலாந்து, பல்கேரியா, ஹங்கேரி, மோல்டோவா, ருமானியா போன்ற நாட்டின் தலைவர்கள் வரவேற்று அடைக்கலம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, இங்கிலாந்தில் வசிப்பவர்களின் உறவினர்கள் உக்ரைனில் சிக்கி தவித்தால், அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்….