தண்டையார்பேட்டை: சென்னையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்றதற்காக ஆரூண், பிரபு, செல்வமணி, அப்பாஸ் என்ற 4 பேரையும், ராயபுரம் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கைது செய்து, நடத்திய விசாரணையில், ஆரூண், பிரபு, செல்வமணி, அப்பாஸ் ஆகியோருக்கு, போதைப்பொருள் எளிதில் கிடைப்பதற்கு, நைஜீரிய நாட்டை சேர்ந்த சிபுல்கே (34) உதவியது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிபுல்கேவை தேடி வந்த நிலையில், செல்போன் செயலி மூலம் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த, சிபுல்கே கடந்த வாரம் ராயபுரம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, போலீசார் பிடிக்க வருவது தெரிந்து, சென்னையில் இருந்து தப்பினார். இந்நிலையில், சிபுல்கே டெல்லிக்கு தப்பி சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், துணை ஆணையர் உத்தரவின்பெயரில், உதவி ஆணையர் மேற்பார்வையில் தனிப்படையினர் டெல்லி விரைந்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற குற்றவாளியை சுற்றி வளைத்து பிடித்து, சென்னை அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மூலை நரம்பு மண்டலத்தை பாதிப்படையவைக்கும் தன்மைகொண்ட மெத்த பெட்டமைன் மாத்திரைகள் மற்றும் போதைப்பொருட்கள், செல்போன் கைப்பற்றபட்டது. மேலும், கைது செய்யப்பட்ட சிபுல்கே மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …