தேவதானப்பட்டி, ஜூன் 19: தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்த சூசைமுத்து(39) என்பவர் சரக்கு வாகனத்தில் அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு அதிக வேகத்துடன் வந்துள்ளார். இதேபோல், கொடைக்கானல் அட்டுவம்பட்டியைச் சேர்ந்த ஞானப்பிரகாஷம்(37) என்பவர் சரக்கு வாகனத்தை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து, தேவதானப்பட்டி போலீசார் 2 டிரைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.