Sunday, May 12, 2024
Home » பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் முதல்வரின் காப்பிட்டு திட்ட முகாம்களில் 35 ஆயிரம் பேர் பதிவு

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் முதல்வரின் காப்பிட்டு திட்ட முகாம்களில் 35 ஆயிரம் பேர் பதிவு

by Ranjith

 

பொள்ளாச்சி, பிப்.5:பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உடுமலைபேட்டை, மடத்துக்குளம், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட பகுதிகளில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு முகாம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கு கடனுதவி வழங்கும் முகாம் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட்டது. இந்த முகாம்களில் நம்மை காக்கும் மற்றும் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ திட்டத்தில் ஒரு குடும்பத்தினர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறம் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான கடனுதவி, புதிய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட முகாம் மற்றும் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடன் வழங்கும் முகாம்களில் கலைஞரின் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் சிறு குறு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாமில் சுமார் 35 ஆயிரத்து 717 பேர் பதிவு பயன்பெற்றனர் என பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

10 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi