கெங்கவல்லி, பிப்.10: கெங்கவல்லி தீயணைப்பு மீட்பு நிலையத்தில், கடந்த ஓராண்டாக நிலைய அலுவலர் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு மீட்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த ரமேஷ்குமார், கெங்கவல்லி தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று பொறுப்பேற்றுக்கொண்டர். அவருக்கு, சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பொறுப்பேற்பு
previous post