கமுதி, ஜூன் 8: கமுதியில் முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கான மையப் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கமுதியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக, முதலமைச்சாின், தொடக்கப் பள்ளிகளில், காலை உணவுத் திட்டத்திற்கான மையப் பொறுப்பாளா்களுக்கு முதல்நாள் பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில் 40 மைய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சிக்கு திட்ட இயக்குநா் அபிதா ஹனிப் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் தலைமை வகித்தனா்.