பொன்னமராவதி,மார்ச் 16: பொன்னமராவதி அருகே தேனிமலை முருகன் கோயிலை சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை நவீன வசதிகள் செய்ய வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தேனிமலையில் பிரசித்தி பெற்ற விளங்கும் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருகார்த்திகை, தை பூசம், பங்குனி உத்திரம் மற்றும் விஷேச நாட்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் என பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வழிபாடு நடைபெற்று வருகின்றது. இந்த வழியாக அதிக பேருந்துகள் இயக்க வேண்டும் கோயிலின் தெற்குப்பகுதி பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலை, கிழக்குப்பகுதி கருகப்பூலாம்பட்டி சாலை நல்ல முறையில் உள்ளது. ஆனால் வடக்கு மற்றும் மேற்குப்புற சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாக பக்தர்கள் கிரிவலம் நடந்து செல்ல முடியாத அறவிற்கு உள்ளது. எனவே தேனிமலை முருகன் கோயிலை சுற்றுத்தளமாக அறிவித்து நவீன வசதிகள் மற்றும் கிரிவல பாதையினை சீர் செய்து புதிதாக தரமான சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.