பொன்னமராவதி, ஜன.9: பொன்னமராவதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடர்பான தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம், இலாஹி ஜான் ஆகியோர் தலைமை வகித்தனர். பொன்னமராவதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார் முன்னிலையில் பயிற்சி தொடங்கியது. பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாலிகை கருப்பு, முகமது ஆசாத் கருத்தாளராக செயல்பட்டனர்.
தமிழ் பாடத்தில் தமிழ் வரி வடிவ எழுத்துக்கள் அறிமுகம், சிறுசிறு வாக்கியங்கள் உருவாக்குதல், எண்ணறிவு கணிதத்தில் எண்களின் எண்ணிக்கை, பூஜ்ஜியம், டிஜிட்டல் எண்களை கற்றுத் தருதல், கடிகாரம், மாதங்கள், போன்றவையும், வாழ்வியல் திறன்களில் பயணச்சீட்டு வாங்குதல், காசோலை பூர்த்தி செய்யும் முறை போன்றவற்றை வயது வந்தோருக்கு கற்றுக் கொடுக்க பயிற்சி கொடுக்கப்பட்டது. புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் ஒருங்கிணைப்பாளர் கல்யாணி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.