தூத்துக்குடி, மே13: தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது.
அதன்படி இந்த மாத சிறப்பு முகாம் இன்று(13ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் திருத்தம், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் மற்றும் பொதுவிநியோக திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.