Thursday, May 16, 2024
Home » பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

பைக் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

by Neethimaan

நெல்லை, ஆக.23: பணகுடி அடுத்த ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் அனீஸ்(20). மும்பையில் வசித்து வந்த இவர், உறவினர் வீட்டு திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு திருமணம் முடிந்த பின்பு அனீஸ், தான் பைக்கில் வருவதாகவும் பெற்றோரை காரில் வாருங்கள் என கூறியுள்ளார். அதன்பிறகு பைக்கில் வந்த அனீஸ், வடக்கன்குளத்தில் வரும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, காரில் பின்னால் வந்த பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டிற்கு வந்த வாலிபர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. களக்காடு: களக்காடு அருகேயுள்ள ஊச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த தொழிலாளி சிவகுமார் (47). இவர் சம்பவத்தன்று களக்காட்டில் இருந்து ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஊச்சிகுளம் அருகே சென்ற போது, சாலையோர மின் கம்பத்தில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் விசாரித்து வருகிறார்.

You may also like

Leave a Comment

17 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi