பவானி, ஜூன்24: அம்மாபேட்டை அடுத்த பூனாச்சி, முகாசிப்புதுாரைச் சேர்ந்தவர் கந்தசாமி (42). இவரது மகன் ஹரிஹரசுதன் (15), சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு வரை படித்த இவர், பூனாச்சி அரசு பள்ளியில் 10-ம் சேர்ந்துள்ளார். இவர், பூனாச்சியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதியினர் ஹரிஹரசுதனை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதிக்கையில் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.