காரிமங்கலம், ஜூன் 18: காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ₹1.25 கோடியும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நவீன கழிப்பறை மற்றும் வணிக வளாகம் கட்ட ₹96 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து புதிய அலுவலக கட்டிடம் கட்டுவது தொடர்பான மண் பரிசோதனை நடந்தது. தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி துணை பேராசிரியர் கௌதமன் தலைமையிலான குழுவினர், மண் பரிசோதனையை மேற்கொண்டனர்.
அப்போது, பேரூராட்சி தலைவர் மனோகரன், செயல் அலுவலர் ஆயிஷா, உதவி பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பரிசோதனை முடிவடைந்து, புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் விரைவில் துவக்கி வைப்பார் என பேரூராட்சி தலைவர் மனோகரன் தெரிவித்தார்.