தேன்கனிக்கோட்டை, ஏப்.4: தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயிலில் தேர்திருவிழா இன்று நடைபெறுகிறது. தேன்கனிக்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த பேட்டராயசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா, மார்ச் 22ம் தேதி துவங்கி வருகிற 17ம்தேதி வரை நடக்கிறது. அதில் முக்கிய விழாவாக தேர்திருவிழா 3 நாட்கள் விமர்சையாக நடைபெறுகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு, ராமபாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில், தேர்திருவிழா நடக்கிறது. தொடர்ந்து இரவு ராதாகிருஷ்ணா கிருபா போஷிதா நாடக குழுவினரால், சம்பூர்ண ராமாயண நாடகம் நடக்கிறது. நாளை காலை, அய்யூர் சாலையில் திருவிழா கமிட்டி சார்பில் எருது விடும் விழா நடக்கிறது. இரவு பாட்டு கச்சேரி, பல்லக்கு ஊர்வலம், வானவேடிக்கை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேர்திருவிழா கமிட்டி தலைவர் சீனிவாசன் மற்றும் கமிட்டியினர் செய்துள்ளனர்.
பேட்டராய சுவாமி கோயில் தேரோட்டம்
previous post