தண்டையார்பேட்டை: புழல் மேட்டுப்பாளையம் சைக்கிள் ஷாப் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (59). மாநகர பேருந்து டிரைவர். உடல்நிலை சரியில்லாததால் கடந்த 15 நாட்களாக விடுமுறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு பேசின் பாலம் பணிமனைக்கு சென்று உள்ளார். அப்போது, அங்கு ஷெனாய் நகர் பார்வதிபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (39) என்பவர் பேருந்துக்கு டீசல் போட்டுவிட்டு பின்பக்கமாக வண்டியை எடுத்தார். அப்போது, அங்கு நடந்து சென்ற ஆல்பர்ட் மீது மோதியது. இதில், பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்ததாகக் கூறினர். புகாரின்படி யானைகவுனி போலீசார் தினேஷ்குமாரை கைது செய்தனர்….