Saturday, June 1, 2024
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கோடை மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கோடை மழை

by Ranjith

 

பெரம்பலூர்,ஏப்.28:பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் நேற்று கனமழை கொட்டித் தீர்த் தது. பெரம்பலூரில் மட்டும் 25 மிமீ மழை பதிவானது. பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861. கடந்த 2021ஆம் ஆண் டு 50ஆண்டுகளுக்குப் பிறகு அளவுக்கு அதிக மாக கொட்டித் தீர்த்ததால் 1366மிமீ பதிவானது. கடந்த 2022ல் 953.73 மிமீ பதிவானது. இந்நிலையில் நடப்பு 2023 ஆம் ஆண்டில் குளிர்கால மழையாக கணக்கிடும் போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சராசரியாக பெய்ய வேண்டிய 26 மில்லி மீட்டருக்கு, 13.27 மில்லி மீட் டர் மட்டுமே பெய்துள்ளது. மார்ச்,ஏப்ரல்,மே ஆகிய கோ டைகால மாதங்களில் 99 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். அது தற்போது மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் நேற்று(27ஆம் தேதி) வரை 51.27 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

இத ன்படி நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 27ம்தேதி வரை 64.55 மில் லிமீட்டர் மழை பதிவாகியு ள்ளது. கோடை மழை பலத்த இடியுடனும் சூறைக்காற்றுட னும் மக்கள் எதிர்பாராத நேரங்களில் திடீர் திடீரென பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பெய்த கோடை மழையில் வேப்ப ந்தட்டை தாலுக்கா கை.க ளத்தூர்(மேற்கு) பகுதியை ச் சேர்ந்த சின்ன சாமி மகன் வையாபுரி என்ப வரது ஓட் டு வீடு பாதி அள வு இடிந்து சேதமடைந்துள் ளது. மேலும் நூத்தப்பூர் (தெற்கு) பகுதியைச் சேர் ந்த கந்தசாமி மனைவி சின்னம்மாள் என்பவரது ஆஸ்பெட்டாஸ் வீடு பாதி யளவு இடிந்து சேதம் அடை ந்துள்ளது.

பெரம்பலூர் தாலுக்கா சிறுவாச்சூர் கிராமத்தில் சுந்தரம் மகன் ராஜா என்பவரது பசு மாடு, மாட்டுக் கொட்டகை இடிந்து விழுந்ததில் இறந்துள்ளது. மேலும்இந்த ஏப்ரல் மாதத் தில் மட்டும் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முரு கன்(45)நெடுவாசல் கிராம த்தை சேர்ந்த சாவித்திரி (34) ஆகிய இருவர் இடி தாக்கி பலியாகி உள்ள நிலையில் நேற்று (27ம் தேதி) மதியம் மூன்று மணி க்கு தொடங்கி 4.15 மணி வரை பெரம்பலூர் மாவட் டத்தில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கி போட்டது.

குறிப்பாக பெரம்பலூர் நகரிலும் நகரை சுற்றிலும் உள்ள பகுதிகளில் ஒரு மணி நேரம் கனரக வாகனங்கள் மட்டுமன்றி வேறு எந்த வாகன போக்குவரத்தும் செல்ல முடியாதபடிக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெரம்பலூர் புது பஸ்டாண்டு பழைய பஸ்டாண்டு பகுதிகள், சாலை ஓரங்கள், பள்ளி வளாகங்கள், கோவில் வளாகங்கள் ஆகியவற் றில் சிறுசிறு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு கனமழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது நேற்று பெரம்பலூர் பகுதி யில் மட்டும் 25 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவா னது குரூப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

7 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi