புழல்: புழல் அடுத்த சூரப்பட்டு புத்தாகரம் சாலை, லட்சுமி அம்மன் நகர் தெருவில் தனியாருக்கு சொந்தமான பெயின்ட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது….