Saturday, May 18, 2024
Home » பெண் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு

பெண் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு

by Ranjith

 

சிவகாசி, நவ.24: சிவகாசி அருகே ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மாலா பிரியதர்ஷினி(42). கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கும் கள்ளக்குறிச்சி விஓசி நகரை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மாலா பிரியதர்ஷினி, சிவசங்கருக்கு 16 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். தொடர்ந்து 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நகையையும் பணத்தையும் மாலாபிரியதர்ஷினி திருப்பிக் கேட்டுள்ளார்.

அப்போது சிவசங்கர் மற்றும் ஐந்து பேர் பிரச்சனை செய்ததால் கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சிவசங்கர் மற்றும் நிலம்பு, கார்த்திகேயன், தேவி, கோமதி ஆகியோர் சேர்ந்து சிவகாசி ஹவுசிங் போர்டில் வீட்டிலிருந்த மாலாபிரியதர்ஷினியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு மாலாபிரியாதர்ஷினி புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

You may also like

Leave a Comment

six + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi