Sunday, May 19, 2024
Home » பெண் இன்ஜினியர் மாயம்: கைதாகிறார் காதலன்

பெண் இன்ஜினியர் மாயம்: கைதாகிறார் காதலன்

by kannappan

சேலம்:  சேலம் டவுன் ஆற்றோரம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கோவிந்தசாமி மகள் சுமிதா(29), பிடெக் பட்டதாரி. பெங்களூருவில் வேலை செய்து வந்த சுமிதா, கொரோனா ஊரடங்கு நேரத்தில் சேலம் வந்தார். கடந்த செப்டம்பர் 23ம்தேதி, சென்னையில் இன்டர்வியூவுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமிதா, தனது செல்போனை ஆப் செய்வதற்கு முன்பு, தந்தைக்கு ‘என்னை இனி தேட வேண்டாம்’ என எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார்.விசாரணையில், அவர் விழுப்புரத்தை சேர்ந்த சரண்குமார் என்பவரை காதலித்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விழுப்புரம் சென்ற போது, சரண்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியும், இதுவரை வரவில்லை. அவர் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஓசூரில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த இளம்பெண் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது பெற்றோரை அழைத்து சென்று போலீசார் காண்பித்த போது, அது தங்களின் மகள் இல்லை என தெரிவித்தனர். என்றாலும் அங்குள்ள எலும்புகளை சேகரித்துள்ள போலீசார் மரபணு சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் தனிப்படை போலீசார் மீண்டும் விழுப்புரம் சென்று, காதலனை கைது செய்ய முடிவு செய்துள்ளனர்….

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi