பல்லடம்,ஜூன்23: பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாமானது பல்லடம் ராயர்பாளையத்தில் உள்ள தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் நடைபெற்றது.குற்றவியல் நீதித்துறை நடுவர் சித்ரா தலைமை தாங்கி பேசுகையில்: பெண்களின் மனநிலை தெளிவாகவும், பிரச்னை இல்லாத சூழலில் வாழ்வதன் மூலமாக நமது சமுதாயம் சிறப்பாக இருக்கும்.
பெண்களை பாதுகாக்கும் உரிமை ஆண்களுக்கு உண்டு.இவ்வாறு அவர் பேசினார். வழக்கறிஞர்கள் வட்ட சட்டப் பணிகள் குழுவின் நடவடிக்கைகள் பற்றியும்,பாலியல் வன்கொடுமைகள் ஏற்படும் போது அதை எவ்வாறு புகார் அளிக்க வேண்டும் எனவும், அதன் வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பொது நல வழக்கில் பிறப்பித்த வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் சட்டம் இயற்றப்பட்டது எனவும் தெரிவித்தனர்.