Friday, May 17, 2024
Home » பு.புளியம்பட்டி, பவானிசாகர், திம்பம் பகுதியில் பரவலாக மழை

பு.புளியம்பட்டி, பவானிசாகர், திம்பம் பகுதியில் பரவலாக மழை

by kannappan

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்றுவட்டார  பகுதிகளில் கடந்தாண்டு போதிய மழை  இல்லாததால் கிணறு, குளம்,குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. இதனால்  விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் கால்நடைகளுக்கு  தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது.  இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை துவக்கம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம்,புஞ்சை புளியம்பட்டி  உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  நேற்று  முன்தினம் பு.புளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி, உயிலம்பாளையம்,  மல்லியம்பட்டி கிராமங்களில் பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள குட்டை,  தடுப்பணைகளுக்கு நீர் வர துவங்கியுள்ளது. மேலும் பவானிசாகர் வனப்பகுதிகளில்  காட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் செந்நிற மழைநீர்  நிரம்பி வழிகின்றன. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதே போல்  வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குட்டைகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளதால்  கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக  விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேபோல் நேற்று மதியம்  பவானிசாகர்  சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய  தொடங்கியது.  பவானிசாகர் அணை, பவானிசாகர் நகர்ப்பகுதி, தொப்பம்பாளையம்,  தொட்டம்பாளையம், முடுக்கன்துறை உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் பெய்த  பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக  வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. கோடையில் பெய்த மழை  விவசாயத்திற்கு பேருதவியாக இருக்கும் என பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி  விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதேபோல் காராப்பாடி, கோப்பம்பாளையம்,   காவிலிபாளையம், மில்மேடு, உக்கரம் பகுதிகளிலும் மழை பெய்தது. இதன்காரணமாக  காவிலிபாளையம் குளத்திற்கு மழை நீர் வரத்து தொடங்கியுள்ளது.மலையில் தோன்றிய புதிய அருவிதென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திம்பம் மலைப்பகுதியில் பெய்த  பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து  ஓடியது. இதன் காரணமாக திம்பம் மலைப்பாதையில் உள்ள பாறைகளில் மழைநீர் கொட்டி  புதிய அருவிகள் தோன்றியது. மலைப்பாதை ஓரத்தில் அருவிகளில் கொட்டும் மழை  நீரை வாகன ஓட்டிகள் கண்டு ரசித்ததோடு செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ  எடுத்து மகிழ்ந்தனர்….

You may also like

Leave a Comment

7 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi