மேட்டூர், ஏப்.26: மேட்டூர்- சேலம் நெடுஞ்சாலையில், கந்தனூர் பஸ் நிறுத்தத்தில் 50ஆண்டுகள் பழமையான புளிய மரம் உள்ளது. புளிய மரத்தின் அடிப்பாகம் முழுவதும் கரையானால் அரிக்கப்பட்டும், தீயில் கருகியும் பொந்து போல் உள்ளது. இதனால் மரம் சாய்ந்து விழாமல் இருக்க பொந்தில், கற்கள் அடுக்கி வைத்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும், போக்குவரத்து மிகுந்த சாலையில் மரம் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அகற்ற, வருவாய் துறை அதிகாரியிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு நிகழும் முன்பாக, நெடுஞ்சாலைத்துறையினர் புளிய மரத்தை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புளியமரத்தை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
previous post