கொடைக்கானல் : புத்தாண்டு விடுமுறை மற்றும் அரையாண்டு விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளின் படையெடுப்பால் கொடைக்கானல் திணறி வருகிறது. கொடைக்கானலில் கடந்த 2 தினங்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை, மற்றும் குளிர் கொடைக்கானலை குளுகுளுவென வைத்துள்ளது. இந்த கிளைமேட்டை ரசிக்க கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி காணப்படுகிறது. கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது. இந்த வருகை புத்தாண்டு முடியும் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …