தஞ்சாவூர்; ஜூலை 14: தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பேருந்து மட்டும் ஆட்டோக்களில் விளம்பரப்படுத்தும் நிகழ்வினை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று காலை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழா ஜூலை நாளை முதல் ஜூலை 24ம் தேதி வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஆர்ஓ பழனிவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், தாசில்தார் சக்திவேல், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.