நாகப்பட்டினம்: புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்த 200 மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு இரண்டு சக்கர வாகனங்களில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் நாகூர் அருகே முட்டம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டனர். போலீசார் வாகனத்தை கைப்பற்றி பரிசோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வந்த 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 200 மதுபாட்டில்கள் மற்றும் 200 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் மதுபானம் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி நாகூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதுச்சேரியிலிருந்து கடந்தி வந்த 200 மதுபாட்டில்கள் பறிமுதல்
previous post