புதுக்கடை, ஜூலை 27: புதுக்கடை அருகே காடஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (53).கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பைக்கில் புதுக்கடை சென்று விட்டு, தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முஞ்சிறை – தேங்காபட்டணம் சாலையில் அதிவேகமாக வந்த மற்றொரு பைக் சுந்தர்ராஜ் பைக்கில் மோதியது. இதில் சுந்தர்ராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு காஞ்சிரகோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுந்தர்ராஜ் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கடை அருகே பைக் மோதி தொழிலாளி படுகாயம்
previous post