விருத்தாசலம், அக். 25: விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படுகளாநத்தம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் தாமோதரன்(35) என்பவர், தான் நடத்தி வந்த பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததை பிடித்து கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 200 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.