சென்னை: பட்ஜெட் உரையின் தொடக்கம் மற்றும் இறுதியில் திருக்குறளை குறிப்பிட்டு முதலமைச்சருக்கு நிதியமைச்சர் பாராட்டு தெரிவித்தார். அதிமுக ஆட்சியைப் போல வரிக்கு வரி முதல்வரை பாராட்டாமல், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்து மட்டுமே உரை இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் ஜெயலலிதா மட்டுமின்றி எடப்பாடியை புகழ்ந்தும் பட்ஜெட் உரை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்தில் தன்னை புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டே அவையில் கூறியிருந்தார்….