கோவை: கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி (மதிமுக), மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் இருபுறங்களிலும், குறிப்பாக, காந்திமாநகர், வி.கே.ரோடு பகுதியில் தினமும் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் கார் ஓட்டுனர்கள் இடையே கடும் சண்டை ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதியுறுகின்றனர். மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அன்றாடம் பணிக்கு செல்லும் ஊழியர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாத வகையில், இப்பகுதியில் காலை 9.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இப்பகுதியில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்தி, போக்குவரத்தை சீர்படுத்தி தருமாறு வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
பீளமேடு மேம்பாலத்தில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டும்
previous post