சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் விடைத்தாள் நகல் கேட்டு பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான நகலை 7ம் தேதி பகல் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 8ம் தேதி 11மணி முதல் 10ம் தேதி வரை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். மறு மதிப்பீடு செய்ய பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.505, மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 வீதம் செலுத்த வேண்டும்….