விருதுநகர், மார்ச் 8: பிளஸ் 1 ஆங்கிலம் தேர்வில் 322 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4 தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் உள்ள 223 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் 98 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 10,855 மாணவர்கள், 12,171 மாணவியர் என மொத்தம் 23,026 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனித்தேர்வர்களாக மாவட்டத்தில் 65 மாணவர்கள், 72 மாணவியர் என மொத்தம் 137 பேர் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 10,920 மாணவர்கள், 12,243 மாணவியர் என மொத்தம் 23,163 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய ஆங்கில தேர்வினை 188 மாணவர்கள், 134 மாணவியர் என 322 பேர் தேர்வு எழுதாமல் ஆப்செண்ட் ஆகி உள்ளனர். அத்துடன் 172 மாணவர்கள், 129 மாணவியர் என 301 பேர் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். மாவட்டத்தில் நேற்று 10,560 மாணவர்கள், 11,980 மாணவியர் என 22,540 பேர் தேர்வெழுதினர்.