Wednesday, May 15, 2024
Home » பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு

பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு

by Francis

 

சமயபுரம், மே 22: மண்ணச்சநல்லூர் அருகே பிரசவத்தின்போது தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. டிரைவர். இவரது மனைவி சூரியகாந்தி (38). இவர்களுக்கு ராகுல் (15), சாதனா (9) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருந்த சூரியகாந்தி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சூரியகாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்தபோது ஆண்குழந்தை இறந்தே பிறந்தது.

இதைதொடர்ந்து சூரியகாந்திக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று சூரியகாந்தியின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அப்போது அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு சூரியகாந்தி உயிரிழந்தார். பிரசவத்தில் தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

13 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi