Wednesday, May 15, 2024
Home » பாலியல் தொல்லையால் மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை!: கல்லூரி மாணவன் போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது..!!

பாலியல் தொல்லையால் மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை!: கல்லூரி மாணவன் போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது..!!

by kannappan

சென்னை: சென்னை பூவிந்தவல்லியில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக 11ம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய மாங்காடு போலீசார், மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், இதுக்கு மேல என்னால வாழ முடியாது. ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை. அந்த கனவு வந்து போகுது. படிக்க முடியல. இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்ல. பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்று தர வேண்டும். உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான். அம்மா போயிட்டு வரேன். பள்ளி பாதுகாப்பில்லை. எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தற்கொலை குறித்து மாணவி ஏற்கனவே படித்த தனியார் பள்ளி, தற்போது படித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாணவி எழுதி வைத்திருந்த கடிதங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாணவியின் செல்போனை கைப்பற்றி யார் யாருடன் அவர் பேசியுள்ளார் என்பது பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவரை விசாரித்த போலீசார், அவரை கைது செய்தனர். மாங்காடு கல்லூரி மாணவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ, வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக முறை செல்போனில் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து துப்புத்துலக்கிய போலீஸ் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

one × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi