போடி, ஜூன் 8: போடி அருகே பரமசிவன் மலைக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முன்னோட்ட திருப்பணியாக நேற்று கோபுர கலசங்களுக்கு நூல் கட்டி இறக்கி கோபுர பூஜை செய்து சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடத்தப்பட்டது.தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடந்தது. இதில் போடி நகர செயலாளர் புருசோத்தமன், தக்கர் மற்றும் செயல் அலுவலர் மாரிமுத்து, கோயில் நிர்வாக குழு ஜமீன்தார் வடமலை ராஜ்ய பாண்டியன், மாவட்ட அறநி லைய குழு தலைவர் செந்தில், போடி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்