Sunday, June 16, 2024
Home » பார்வதியாக வேடமிட்டு சிவதாண்டவம் ஆடியவர் மேடையிலேயே மரணம்: ஜம்முவில் பரிதாபம்

பார்வதியாக வேடமிட்டு சிவதாண்டவம் ஆடியவர் மேடையிலேயே மரணம்: ஜம்முவில் பரிதாபம்

by kannappan

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் நாடகம் ஒன்றில் பார்வதி தேவியாக வேடமிட்டு சிவதாண்டவம் ஆடிய வாலிபர். மாரடைப்பால் மேடையிலேயே இறந்தார். ஜம்மு காஷ்மீரின் கோதாசோனியாவில் உள்ள ஜக்ரானில், கடந்த செவ்வாய்கிழமை இரவு மேடை நாடகம் நடந்தது. இதில், சிவதாண்டவம் ஆடப்பட்டது. இதில், பார்வதி தேவியாக யோகேஷ் குப்தா என்ற 20 வயது வாலிபர் வேடமிட்டு ஆடினார். இவர் மேடையில் உக்கிரமாக நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்தார். பின்னர், அவரால் எழ முடியவில்லை. உடனடியாக, சக கலைஞர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேகமாக நடனமாடியதால் மாரடைப்பு ஏற்பட்டு, அவர் இறந்ததாக கூறப்படுகிறது. மேடையில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது….

You may also like

Leave a Comment

nineteen − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi