இண்டியன் வெல்ஸ்: கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு, இந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டி அக்டோபரில் நடைபெறும் என்று ஏடிபி அறிவித்துள்ளது.சர்வதேச கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான விம்பிள்டன், பிரெஞ்ச், ஆஸ்திரேலியா, யுஎஸ் ஓபன் போட்டிகளுக்கு அடுத்து 5வது இடத்தில் இருப்பது பாரிபா இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி. ரசிகர்களிடைய அதிக வரவேற்பை பெற்றுள்ள இத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெறும்.ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கம் போல் நடத்த திட்டமிட்டிருந்தனர். அமெரிக்காவில் கொரோனா 2வது அலை தீவிரமானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் பரவல் குறைந்து வருவதால், போட்டியை நடத்த முடிவு செய்தனர். அதே சமயம் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என கிராண்ட் ஸ்லாம் போட்டிகளும், அடுத்தடுத்து ஏடிபி , டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டிகளும் நடைபெற உள்ளன. எனவே மற்ற போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பாரிபா ஒபன் தொடர் இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என்று ஏடிபி தலைவர் ஆந்த்ரியா கவுடெண்சி தெரிவித்துள்ளார்….