சேலம், மார்ச் 11: சேலம் மாநகர், மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் அஸ்தம்பட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைவர் கதிர்.ராசரத்தினம் வரவேற்றார். சேலம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் குணசேகரன் சிறப்புரையாற்றினார். வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாகல்பட்டி ஊராட்சி, அரசமரத்துக்காடு பஸ் நிறுத்தத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த பேருந்து நிறுத்தத்தை இடித்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காத ஓமலூர் காவல்துறையை கண்டித்து நாளை (11ம் தேதி) சட்டமன்ற உறுப்பினர் அருள் நடத்தும் தனி நபர் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
சேலம் மாநகர், மாவட்டத்திற்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.