கும்பகோணம், பிப்.8: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆணையராக என்.சிவக்குமார் பதவி ஏற்றுள்ளார். இவர் இதற்கு முன் கும்பகோணத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) பணியாற்றி வந்தார். இதற்கு முன் இங்கு பணியாற்றிய ஆணையர் கூத்தரசன் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணி மாறுதலாகி சென்றுள்ளார்.