பெரம்பலூர், மார்ச் 22: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பாண்டாகப்பாடியிலிருந்து மாவிலங்கை செல்லும் பிரிவுசாலையில் நேற்று (21ம்தேதி) மாலை 5.15 மணிக்கு பெரம்பலூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆறு முகம் தலைமையில், எஸ்எஸ்ஐ செல்லாயி உள்ளிட்டோர் அடங்கிய பறக்கும்படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே காரில் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுக்கா, புக்கிரவாரி கிராமம், கிழக்குத் தெரு வைச்சேர்ந்த ராஜகோபால் மகன் சிவக்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி தனது காரில் எடுத்துச் சென்ற ரூ1,19,200-ஐ பறி முதல் செய்தனர். கைப்பற் றப்பட்டபணம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் கோகுல் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.