தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு, ஆர்எஸ்எஸ் கெலமங்கலம் ஒன்றியம் சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. ஆர்எஸ்எஸ் சேலம் கோட்ட செயலாளர் ராஜா துவக்கி வைத்தார். பாஜ மாவட்ட தலைவர் நாகராஜ், இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் உமேஷ், விஷ்வ இந்து பரிசத், பஜரங்தள் மாநில செயலாளர் கிரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். முகாமில் இந்து அமைப்புகளின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.