டெல்லி : இந்திய ராணுவத்தின் காலாட் படையின் 75வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் படை ஊடுருவிய போது, 1947ம் ஆண்டு அக் 27ம் தேதியன்று சீக்கிய ராணுவ பிரிவினர் போரிட்டு வெற்றி பெற்றதன் நினைவாக காலாட் படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் போர் நினைவிடத்தில் பாதுகாப்புப் படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ தலைமை தளபதி எம்எம் நரவனே ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். …