Monday, June 17, 2024
Home » பழநியில் கொலை திட்டம் தீட்டிய 8 பேர் கைது

பழநியில் கொலை திட்டம் தீட்டிய 8 பேர் கைது

by Ranjith

பழநி, ஆக. 8: பழநியில் கொலை செய்ய திட்டம் தீட்டிய 8 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பழநி பாண்டியன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பொன்காளியம்மன் கோயில் பகுதியில் சிலர் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருப்பதாக கூறி முன்னுக்குப்பின் புரணாக பேசி உள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அக்கும்பலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர்கள் சிவகிரிப்பட்டியை சேர்ந்த முத்தையா (26), தனுஷ்குமார் (19), ஆயக்குடியை சேர்ந்த ராம்குமார் (20), அர்ஜூன்குமார் (19), கண்ணன்குமார் (28), மதுரை மாவட்டம், கீழமுத்துப்பட்டியை சேர்ந்த சரவணன் (23), பிரேம்நாத் (22), பழங்காநத்தத்தை சேர்ந்த சரவணன் (21) என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்தையாவின் உறவினரை கொன்றவர்களை பழிதீர்க்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 8 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர், கைது செய்யப்பட்டவர்களில் பலரின் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

two − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi