கீழக்கரை, டிச.21: ஏர்வாடி அருகே சடைமுனியன் வலசை துவக்கப் பள்ளியை சுற்றி மழை நீர் தேங்கியது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் சிரமம் அடைந்தனர். கலெக்டர் விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தின் பேரில், கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், ஏர்வாடி விஏஓ மாரியப்பன் உள்ளிட்டோர் பள்ளிக்கு வந்தனர். பள்ளியை சூழ்ந்த மழை நீரை வாகனம் மூலம் அப்புறப்படுத்தினர்.