பல்லடம், ஜூன் 2: பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் குட்டையில் விழுந்து பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். திருப்பூர் வீரபாண்டி வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த ஜம்புலிங்கம் மகன் சுகுமார் (வயது 38). இவர் பனியன் நிறுவன ஒப்பந்ததாரராக இருந்தார். நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.